home|information|documents|news|programs|resources|contacts

Disaster Management
Sri Lanka Flag
இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசு

------------
announcements
------------

welcome

மனித உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் பிரதம செயலாளரின் பிரதிநிதி திரு.வோல்டர் கலின் அவர்கள் இலங்கைக்கான ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்ட போது அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களை சந்திக்கையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இங்கே காணலாம்.

இவ் விஜயத்தின் போது வோல்டர் கலின் அவர்கள் புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற பகுதிகளில் தஞ்சமடைந்துள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து பார்க்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இலங்கை அனர்த்த முகாமைத்துவ , மனித உரிமைகள் அமைச்சு

அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபை

ஜனாதிபதி குழுவின் தலைவர் பிரதம மந்திரி குழுவின் பிரதித் தலைவர் எதிர்கட்சித் தலைவர்

குழுவில் அடங்கியுள்ள அமைச்சுக்கள் பின்வரும் விடயங்களுக்கு பொறுப்பாக இருக்கின்றன.

1.சமூக நலனோம்புகை

2.புனர்வாழ்வு, புனர்நிர்மாணம்

3.சுற்றாடல்

4.உள்நாட்டு அலுவல்கள்

5.சுகாதாரம்

6.விஞ்ஞான, தொழில்நுட்பம்

7.வீடமைப்பு

8.கரையோர பிரதேசங்கள் பாதுகாப்பு

9.நீர்ப்பாசனம்

10.மின்சாரம்

11.பாதுகாப்பு

12.பொலிஸ்

13.நிதி

14.காணி

15.கடற்றொழில், நீர்வளங்கள்

16.வெளிநாட்டலுவல்கள்

17.நீர் வழங்கள், வடிகால் அமைப்பு

18.நெடுஞ்சாலைகள்

19.நகர திட்டமிடல்

20.கல்வி

21.அனர்த்த முகாமைத்துவ , மனித உரிமைகள் அமைச்சு

22.நிவாரண, புனர்வாழ்வு , நல்லிணக்ம்/P>

23.தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சு

ஒவ்வொறு மாகாண சபையினதும் ஒரு பிரதிநிதி பிரதான அமைச்சர்களுடன் நியமன பிரதிநிதிகள் இல்லாத பட்சத்தில் மாகாண ஆளுநர் சம்பந்தப்பட்ட கூட்டங்களில் சமூகமளித்திருப்பார்கள்.

இரண்டாவது சபைக் கூட்டம் 2007 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 30 ஆம் திகதி ஜனாதிபதி ராஜபக்ஷ்வின் அனுசரணையுடன் நடைபெற்றது. எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு .

அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் இரண்டாவது கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் .

1.அனர்த்த முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் பி. டயஸ் அமரசிங்ஹ 30.07.2007 தொடக்கம் அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசியசபையின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

2.சபைக்கான செயலகம் அனர்த்த முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சிலிருந்து செயல்படுமென தீர்மானிக்கப்பட்டது./P>

3.அனர்த்த முகாமைத்துவம், நிவாரணம், புனர்வாழ்வு, நல்லிணக்கம், தேசத்தை கட்டியெழுப்புதல் ஆகிய விடயங்களுக்கு பொறுப்பான அமைச்சர்கள் சபையின் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டார்கள்.

4.சபையின் ஒரு அங்கமாக தொழிநுட்ப ஆலோசனை குழுவொன்று நியமிக்கப்பட்டது. சுனாமி எச்சரிக்கைகளை விடுத்தல் , இயற்கை அழிவுகளை சமாளித்தல் , இயற்கை அழிவுகள் தொடர்பான செயற்பாடுகளை அவதானித்தல், உர்ய வழிக்காட்டுதலை வழங்குதல் போன்றவை இக்குழுவின் கடமைகளாகும்.

5.மண்சரிவு ஆபத்தை எதிர்நோக்கும் பகுதிகளில் நிறுவப்படவிருக்கும் கட்டடங்களுக்கு வேலை ஆரம்பமாகும் முன்னரே தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்திடம் இருந்து அங்கீகாரம் பெறவேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.

6.சகல மாவட்ட செயலாளர்களுக்கும் இயற்கை அழிவுகள் தொடர்பான அவசரக்கால நிலைமைகளுக்கென ஐந்து லட்சம் ரூபா ஒதுக்கப்கடும்.


வானிலை ஆராய்ச்சி திணைக்களம் டொப்பியர் ராடர் உபகரணங்களை கொள்வனவு செய்கிறது.

வானிலை ஆராய்ச்சி திணைக்களம் உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனத்திடம் இருந்து டொப்பியர் ராடார் உபகரணங்களை கொள்வனவு செய்துள்ளது. இவற்றைக் கொண்டு வானிலை ஆராய்ச்சி திணைக்களம் இயற்கை அழிவுகள் குறித்து பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்க முடியும்.


ஜெனீவா செய்தியாளர் மாநாட்டில் இலங்கை அமைச்சர்கள்

அமைச்சர்கள் மஹந்த சமரசிங்க கெஹலிய ரம்புக்வெல்ல, டக்லஸ் தேவானந்தா, அத்தாவுட செனிவிரத்ன மற்றும் ஐனாதிபதியின் செயலாளர் லலித் வீரத்துங்க ஆகியோர் ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் மாநாட்டில் காணப்படுகின்றனர்.


சவர்தேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதித் தலைவர் ஐனாதிபதியை சந்திக்கின்றார்

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதித் தலைவர் ஜெக்ஸ் போஸ்டரையும், லெப்டினல் அமைச்சர்கள் மஹிந்த சமரசிங்க, கெஹலிய. ரம்புக்வெல்ல, டக்லஸ் தேவானந்தா ஆகியோரையும் படத்தில் காணலாம்.


ஐ.நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகரை ஐனாதிபதி சந்திக்கின்றார்

ஐ.நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் அந்தோணியோ கற்றஸ் மஹிந்த ராஐபக்ஷவை சந்திக்கிறார். அனர்த்த முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் படத்தில் காணப்படுகிறார்.


சர்வதேச சட்ட ஆணைக்குழுவின் செயலாளர் நாயகம் ஐனாதிபதியை சந்திக்கிறார்.

சர்வதேச சட்ட ஆணைக்குழுவின் செயலாளர் நாயகம் நிக்கலஸ் ஹோவைனை ஐனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திக்கிறார். அனர்த்த முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் இந்த சந்திப்பில் கலந்து கொள்கிறார்.


ஜனாதிபதி ராஐபக்ஷ எரிக் சொல்ஹெய்முடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்

இலங்கைக்கான முன்னால் நோர்வே சமாதான ஏற்பாட்டாளர் எரிக் சொல்ஹெய்முடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேச்சுவார்த்தை நடத்துகிறார். கெஹலிய ரம்புக்வெல்ல, டக்லஸ் தேவானந்தா, மற்றும் ஜனாதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர்.


யுஎன்எச்சீ ஆண்டு 7வது ஆண்டு பூர்த்தி நினைவுகூறப்பட்டது.

யுஎன்எச்சீ ஆரின் 7வது ஆண்டு பூர்த்தி, விசேட அதிதிகள் முன்னிலையில் அண்மையில் பண்டாநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்பத்தில் நினைவுகூறப்பட்டது.

நினைவுகூறும் வைபவத்தில் பிரதம அதிதியுடன் அனர்த்த முகாமைத்துவ, அமைச்சர் மஹிந்த சமரசிங்வும் உள்ளூர், சர்வதேச விருந்தினர்களும் படத்தில் காணப்படுகின்றனர்.


17 உதவிப் பணியாளர்கள் மரணங்கள் குறித்து அமைச்சர் சமரசிங்க ஊடகங்களுக்கு எடுத்துக் கூறினார்

இலங்கை சமாதான செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அனர்த்த முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் மூதூரில் 17 உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கலந்துறையாடல் ஒன்று இடம்பெற்றது.

இலங்கையில் யுத்தம் நடைபெறும் பகுதிகளில் பணியாற்றுவோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து கலந்துறையாடலில் விளக்கிக் கூறப்பட்டது. உள்ளூர், சர்வதேச சமூகம் இந்த கொலைகளை கண்டித்தது.

அமைச்சர் மஹிந்த சமரசிங்க, சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த பிரதி சொலிசிற்றர் ஜெனரல்கள் அமிந்த பெர்ணான்டோ, யசந்த கோதாகொட, சமாதானத்தின் செயலாளர் பேராசிரியர் ராஜீவ் விஜயசிங்க ஆகயோருடன் காணப்படுகின்றனர்.


இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரிகள்

சபையின் தலைவரும் ஏனைய அங்கத்தவர்களும்

செயலாளர்

மேலதிக செயலாளர் சட்டம்

பிரதி செயலாளர்

நிர்வாக, நிதிப்பணிப்பாளர்

கண்காணிப்பு, மதீப்பீட்டு பணிப்பாளர்

கல்வி, விசேட திட்டங்கள் பணிப்பாளர்

விசாரணைகள் பணிப்பாளர்

விசாரணைகள் பிரதிப் பணிப்பாளர்

கண்காணிப்பு, மதீப்பீட்டு பிரதி பணிப்பாளர்

கணக்காளர்

உள்ளக கணக்காளர்

நிர்வாக அதிகாரி

வலையமைப்பு நிர்வாகி

ஆவணப்படுத்தல் அதிகாரி

சட்ட அதிகாரி

பிராந்திய ஒருங்கிணைப்பாளர்கள்

விசாரணை அதிகாரி

சட்ட உதவியாளர்கள்

விசாரணை உதவியாளர்கள்


குடியிருப்புகளைப் பதிவு செய்வதற்கான புதிய நடவடிக்கை முறை
அவசரகால ஒழுங்குவிதிகளின் 23 ஆம் ஒழுங்கு விதியின் கீழ் வீடுகளிலுள்ளவர்களைப் பதிவு செய்வதற்கென கையாளப்படும் வெவ்வேறு நடைமுறைகள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சுக்கு குடியியல் கமுதாயக் குழுக்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. பதிவு செய்வதற்கு ஒரே சீரான முறைமையொன்று நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தும் பணிப்புரைகள் வழங்கப்படுவதனை இயலச் செய்தவற்கு சட்டத்துறை, தலைமையதிபதி திணைக்களத்துடனும் பொலிஸ் திணைக்களத்துடனுமான கலந்தாலோசனையுடன் அமைச்சு தொடக்க நடவடிக்கைகள் மேற்கொண்டது. இந்த முறைப்பாடுகள் (2006 யூன் மாதம் திருத்தப்பட்டவாறான) அவசரகால ஒழுங்குவிதிகளின் 23 ஆம் ஒழுங்குவிதியின் கீழ் பதிவு செய்யும் முறைமையில் சில சிக்கல்களைச் சுட்டிக் காட்டின.

மேலும்>>


மனித உரிமைகள் சபை 4வது மகாநாடு
இலங்கை தூதுக்குழுவின் தலைவர் என்ற முறையில் கௌரவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரதி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.


தலைவர் அவர்களே,

இந்த சபையில் நான் கடைசியாக உரையாற்றிய பின்னர், இலங்கையில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைசெய்ய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளமையை ஒரு முக்கிய முன்னேற்றகரமான நிகழ்வாக எடுத்துக் கூறலாம். இந்த விசாரணை ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை அவதானிப்பதற்கென நியமிக்கப்பட்ட திறமைவாய்ந்த, சர்வதேச சுயாதீன குழு பெப்ரவரி மாதம் கொழும்பில் கூடி உள்ளூர் ஆணையாளர்களுடன் ஆரம்ப கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த கௌரவ நீதியரசர் பி.என். பகவதி தலைமையிலான 11 உறுப்பினர்களைக் கொண்ட சர்வதேச சுயாதீன குழுவில் அவுஸ்திரேலியா, கனடா, சைப்ரஸ், ஜப்பான், நெதர்லாந்து, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றினால் பிரேரிக்கப்பட்டவர்களும் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சர்வதேச பாராளுமன்ற ஒன்றியம் ஆகியன வழங்கிய பட்டியலிலிருந்து பெறப்பட்டவர்களும் அங்கம் வகிக்கிறார்கள். ஜனாதிபதி ஆணைக்குழுவும் சர்வதேச சுயாதீன குழுவும் தேசீய சட்டங்களும் சர்வதேச விதிகள், தராதரங்களுக்கும் அமைய அவற்றின் கடமைகளைச் செய்ய அவசியமான சகல வசதிகளையும் செய்து கொடுக்க இலங்கை அரசாங்கம் தயாராக இருக்கிறது. இலங்கையில் மனித உரிமை பேணலை ஊக்குவித்து பாதுகாப்பது தொடர்பான விடயங்களில் இந்த அமைப்புக்கள் கடைப்பிடிக்கும் வெளிப்படையானதும் ஆக்கபூர்வமானதுமான ஈடுபாட்டை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் இச்சபையில் சமர்ப்பித்துவரும்.

மனித உரிமைகள் ஆணைக்குழு, குறிப்பாக அதன் சட்ட ஆட்சிப் பிரிவு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கும் பிராந்தியத்தில் சாட்சிகளை முன்வைப்பதில் முன்மாதிரியாக விளங்கும் தேசீய நிறுவனங்களுக்கும் வழங்கிய அரிய ஆலோசனைகள் மற்றும் ஆதரவுக்காக இச்சந்தர்ப்பத்தில் நான் அதற்கு நன்றிகூறக் கடைமைப்பட்டுள்ளேன்.


மேலும்>>

--------------------------